மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஆதார் மையம் நேற்று பெய்த மழைக்கு இடிந்து விழுந்தது.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் ஆதார் மையத்தில் நேற்று பெய்த மழையின் காரணமாக மேற்கூரை இடிந்து விழுந்தது. இதனால் தற்காலிகமாக ஊழியர்கள் ஆதார் மையத்தை அடைத்தனர். ஆதார் எடுக்க வந்த பொதுமக்கள் சிரமப்பட்டனர்.
கடந்த இரண்டாண்டுகளுக்கு முன் மழைக்கு இதே கட்டிடம் இடிந்து விழுந்த போது ரூ.4 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.















