திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் இன்று மாதாந்திர விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட அலுவலர்கள் பங்கேற்காததை கண்டித்து ஒன்றிய அலுவலகக் கூட்ட அரங்க நுழைவாயிலில் விவசாயிகள் செருப்பு மாலை அணிவித்து எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.











