விருதுநகர்மாவட்டம் நரிக்குடி அருகே மறையூரை சேர்ந்தவர் பொன்ராமன்43. மதுரை கூடல்நகர் சொக்கலிங்கம் நகர் முதல் தெருவை சேர்ந்தவர் யதுநந்தகிருஷ்ணன் 43.இவர்கள் இருவரும் நண்பர்கள். இரண்டு பேரும் மது அருந்தி கொண்டிருந்தார்கள்.
அப்போது போதை ஏறி அவர்களுக்குள் தகறாறு ஏற்பட்டது. இதில் பொன்ராமனை யதுநந்தகிருஷ்ணன் அடித்து கொலை செய்துவிட்டார்.இத்தகவல் அறிந்த கூடல்புதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கொலை செய்யப்பட்ட பொன்ராமின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். யது நந்த கிருஷ்ணணை கைது செய்தனர்.














