உயர் நீதிமன்ற உத்தரவை மீறி ஆன்லைன் வகுப்பு நிறுத்தம் தனியார் பள்ளிகள் அடாவடி

0
344

 

 தமிழகத்தில் கடந்த ஓராண்டுக்கு மேலாக  கொரோனா தொற்றுநோய் காரணமாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தது. தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டு  பள்ளிகளில் 9 முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை இரு பிரிவாக வகுப்புகள் நடத்த பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டது.  கடந்த சில வாரங்களாக பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதில் இருபாலர் படிக்கும் பள்ளிகளில் மாணவர்களுக்கு மூன்று நாட்களும் மாணவிகளுக்கு மூன்று நாட்களும் என நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதுதவிர செல்போன் மூலம் இணைய வழியாக வீட்டிலிருந்தே படிக்கும் மாணவர்கள் வகுப்பில் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பள்ளி கல்வி கட்டணத்தை செலுத்த கோரி பல்வேறு பள்ளிகள் பெற்றோர்களை நிர்ப்பந்தம் செய்வதாகவும் இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் பள்ளிகள் இவ்வாறு செய்வதால் பெற்றோர்களும் மாணவர்களும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர் என்று சென்னை உயர் நீதிமன்றத்திலும் மதுரை உயர் நீதிமன்றத்திலும் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் பள்ளிகள் திறக்கப்பட்ட பின் கல்வி கட்டணத்தை 40 சதவீதம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்றும் அதுவும் இந்த ஆண்டு டிசம்பர் வரை அவகாசம் அளிக்க வேண்டுமென்றும் மீதி கல்வி கட்டண தொகையை அடுத்த  ஆண்டுபள்ளிபருவம் முடிவதற்குள் செலுத்த அவகாசம் அளிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டதோடு நேரடியாக பள்ளிக்கு வராத மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் மூலமாக பாடங்களைப் படிக்கலாம் என்றும் அவர்களை தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இந்த உத்தரவை கடைபிடிக்காத பள்ளிகள் மீது தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள்உத்தரவிட்டனர.

. ஆனால் கோவையில் பெரும்பாலான தனியார் பள்ளிகள் உயர் நீதிமன்ற உத்தரவை மீறி ஆன்லைன் மூலமாக படிக்கும் மாணவர்களிடமும் நேரடி வகுப்பில் கலந்து கொள்பவர்களிடம் முழு கட்டணத்தையும் செலுத்துமாறு மாணவர்களை நிர்ப்பந்தம் செய்வதாகவும் இதனால் மாணவர்கள் மன உளைச்சலஏற்படுத்துவதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் நீதிமன்றம் மற்றும் அரசு 40{7a0882499a9dac11d1a5e618ecfeec8f2b279bdf1fc3589101913219fc8b42ec} மட்டும் செலுத்தினால் போதும் என்று கூறிவந்த நிலையில் கோவையில் பல பள்ளிகள் ஆண்டுக் கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று கட்டாயப் படுத்துவது புகார் தெரிவிக்கின்றனர்.

வரும் திங்கட்கிழமை அன்று பத்தாம் வகுப்பு மாணவர்கள் தேர்வு நடைபெற உள்ள சூழ்நிலையில் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலமாக படிக்கும் மாணவர்களிடம் இணையதள குறியீட்டை பள்ளி நிர்வாகங்கள் நேற்று இரவு துண்டித்து விட்டனர். இதனால் நேற்று இரவு முதல் ஆன்லைன் மூலமாக தேர்வுக்கு படிக்க முடியாத சூழ்நிலை உள்ளதாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் வரும் திங்கட்கிழமை அன்று தேர்வு எழுத முடியாத நிலைக்கு நேற்று ஆன்லைன் துண்டித்து விட்டதால் மாணவர்கள்  கடுமையாக பாதிப்பு அடைந்துள்ளனர்.

கோவையில் அவினாசி சாலையில் உள்ள பல பள்ளிகளில் இது போன்று அரசு மற்றும் உயர் நீதிமன்ற உத்தரவை மீறி செயல்பட்டு வருவதாகும் இதுதொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் ,கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் பள்ளிக்கல்வி இயக்குனர் , கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆகியோர் உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பு செயலாளர் லோகுஅவசர மனு ஒன்றை தமிழக அரசுக்கு அனுப்பி உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here