தமிழகத்தின் அனைத்து ஊராட்சிகளிலும், நீர்நிலைகள் மேம்பாடு மற்றும் மழை நீர் சேகரிப்பு குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சிறப்பு கிராம சபைக் கூட்டம், இன்று(ஆக.,24) நடத்தப்படுகிறது.
அனைத்து வீடுகளுக்கும், 2024க்குள் குழாய் வழியாக, குடிநீர் தரும், மத்திய அரசின் ‘ஜல் ஜீவன் இயக்கம்’ திட்டம் குறித்து, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, அனைத்து கிராம ஊராட்சிகளிலும், இன்று காலை, 11:00 மணிக்கு சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்தப்படுகிறது.












