தமிழக விவசாயிகளுக்கு தட்கல் திட்டத்தில் மின் இணைப்பு வழங்கப்படுகிறது. இதற்காக 5ஹெச் பி இணைப்புக்கு ரூ 2.50 லட்சமும், 7ஹொச்பி இணைப்புக்கு ரூ 2.75 லட்சமும், 10 ஹெச்பி இணைப்புக்கு ரூ 3லட்சமும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இணைப்பு பெற்றபின்பு மின் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
சாத்தான்குளம் பகுதி விவசாயிகள் 26 பேர் இந்த தட்கல் இணைப்பு பெற்றுள்ளனர். அவர்கள் கட்டண தொகைக்கு வரைவோலை எடுத்து மின்வாரிய அலுவலகத்தில் கட்டச்சென்றால் அதிகாரிகள் குறிப்பிட்ட எலெக்ட்ரிக் கடைக்கு அனுப்பிவைக்கின்றனர். கடைக்காரர், அங்குதான் மின்மோட்டார் வாங்கவேண்டும் என்ற நிபந்தனை விதிப்பதோடு, கூடுதலாக ரூ20 ஆயிரம் கேட்பதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். கடன் உடன் வாங்கி பயிரை காப்பாற்ற மின் இணைப்பு பெற்றால், மின்வாரியத்துக்கு வட்டி கட்டவேண்டியுள்ளது என புலம்புகின்றனர்.
மின்வாரிய அலுவலகத்தில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதில்லை எனக்கூறுகின்றனர். கலெக்டர் விசாரணையில்தான் இந்த ‘கரண்ட்’ பிரச்சினை தீரும்.