கியூபா நாட்டில் திட்டமிட்டு உள்நாட்டு பிரச்சினைகளை உருவாக்கி, அந்த நாட்டு எதிராக சீர்குலைவு வேலைகளை அமெரிக்கா செய்து வருவதாகவும், அதனை கண்டித்தும், அமெரிக்கா உள்நாட்டு பிரச்சினைகளை உருவாக்குவதை கைவிட வலியுறுத்தியும் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இந்தியக் கலாச்சார நட்புறவுக் கழகம் மற்றும் கோவில்பட்டி கருத்துரிமை கூட்டமைப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவில்பட்டி இ.எஸ்.ஐ. மருந்தகம் முன்பு . நட நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்தியக் கலாச்சார நட்புறவுக் கழக மாநில செயலாளர் தமிழரசன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் அமெரிக்காவை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பப் பட்டன.














