புகையிலை பொருட்கள் விற்ற 21 பேர் கைது

0
1314

குமரி மாவட்டத்தில் தடைசெய்யப்பட்டுள்ள புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் புகையிலை பொருட்களை விற்பவர்களை கண்காணித்து கைது செய்ய உத்தரவிட்டார்.

அதன்படி நேற்று போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் பள்ளிகள், கல்லூரிகள், பஸ் நிலையம் மற்றும் ஆஸ்பத்திரிகள் ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அதில் தடை செய்யப்பட்டுள்ள புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தெரிய வந்தது. மாவட்டம் முழுவதும் நடந்த இந்த சோதனையில் 21 பேர் கைது செய்யப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here