ஜப்பான் டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர்கள் வீராங்கனைகள் 126 பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள் அவர்களில் ஒருவர் இந்தியாவுக்கான முதல் பதக்கத்தை பெற்றுத் தந்துள்ளார்.
49 கிலோ எடை பிரிவுக்கு எடைப்பிரிவில் பளுதூக்கும் போட்டியில் வீராங்கனை மீராபாய் சானு வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.
இறுதிப் போட்டியில் கிளீன் அன் ஜெர்க் பிரிவில் அவர் முதல் முயற்சியிலேயே 110 கிலோவை தூக்கினார். இரண்டாவது முயற்சியில் 115 கிலோ தூக்கி ஒரு புதிய ஒலிம்பிக் சாதனையையும் படைத்தார்.
ஆனால், மூன்றாவது முயற்சியில் அவர் 117 கிலோவை தூக்க முயன்று தோல்வியுற்றார்.














