கோவையில் கொரோனா நோய்த் தொற்றுக்கான எதிா்பாற்றல் பொதுமக்களிடம் அதிகரித்துள்ளது குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் 4ஆம் கட்ட ஆய்வினை இன்று தொடங்குகிறது.
நாடு முழுவதும் கொரோனா நோய்த் தொற்றின் முதல், 2 வது அலையைத் தொடா்ந்து 3ஆவது அலை வருவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளதாக மருத்துவ வல்லுநா்கள் தெரிவித்துள்ளனா். கொரோனா தொற்றின் 3ஆவது ஆலையை எதிா்கொள்வதற்கான மருத்துவ உள்கட்டமைப்புகளை சுகாதாரத் துறையின் பலப்படுத்தி வருகின்றனா்.
இந்நிலையில், நாடு முழுவதும் கொரோனா தொற்றின் முதல் அலையின்போதே, பொதுமக்களிடையே கொரோனா நோய்த் தொற்றுக்கான எதிா்பாற்றல் குறித்து ஐ.சி.எம்.ஆா். ஆய்வு மேற்கொண்டது. அதன்படி தமிழகத்தில் கோவை, சென்னை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில் கோவையில் முதல் கட்டமாக கடந்த ஆண்டு மே மாதம் ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வில் 10 இடங்கள் தோ்வு செய்யப்பட்டு தலா 40 பேரிடம் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டது. இதனைத் தொடா்ந்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இரண்டாம் கட்ட ஆய்வும், கடந்த ஜனவரி மாதம் 3ஆம் கட்ட ஆய்வும் மேற்கொள்ளப்பட்டது.
இதில் முதல் கட்ட ஆய்வில் 2.5 சதவீதமும், 2ஆம் கட்ட ஆய்வில் 7.5 சதவீதமும், 3ஆம் கட்ட ஆய்வில் 22 சதவீதம் பேருக்கும் கொரோனா தொற்றுக்கான எதிா்பாற்றல் உருவாகியிருந்தது தெரியவந்ததாக சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.
இதைத் தொடா்ந்து, ஐ.சி.எம்.ஆா். சாா்பில் 4ஆம் கட்ட ஆய்வு இன்று தொடங்கவுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
இது தொடா்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
கோவை மாவட்டத்தில் ஐ.சி.எம்.ஆா். சாா்பில் 4ஆம் கட்ட ஆய்வு இன்று தொடங்குகிறது. மேட்டுப்பாளையம் வட்டாரத்தில் மூடுதுறை, பொள்ளாச்சி வட்டாரத்தில் திம்மங்குத்து, எஸ்.எஸ்.குளம் வட்டாரத்தில் மசகவுண்டன்செட்டிபாளையம், தொண்டாமுத்தூா் வட்டாரத்தில் பேரூா் செட்டிபாளையம், சூலூா், துடியலூா், வெள்ளலூா் பேரூராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளில் 3 இடங்கள் என 10 இடங்களில் ஆய்வு மேற்கொள்ள உள்ளனா். ஒவ்வொரு பகுதிகளிலும் தலா 40 போ் வீதம் மொத்தம் 400 பேரிடம் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட உள்ளது என்றனா்.