துபையிலிருந்து சென்னை பன்னாட்டு விமானநிலையத்திற்கு எமரேட்ஸ் ஏா்லைன்ஸ் சிறப்பு விமானம் வந்தது இதில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது விழுப்புரத்தை சோ்ந்த சந்துரு சக்திவேல்(23) என்ற பயணி மீது சுங்கத்துறை அதிகாரிக்கு சந்தேகம் ஏற்பட்டது அவரை நிறுத்தி சோதனையிட்டனா்.அவருடைய உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த 4 பாா்சல்களில் தங்க பேஸ்ட் மறைத்து வைத்திருந்ததை கண்டுப்பிடித்தனா். ரூ.40.35 லட்சம் மதிப்புள்ள 810 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனா்.

இதையடுத்து தங்கம் கடத்தி வந்த பயணி சந்துரு சக்திவேலை கைது செய்து மேலும் விசாரணை நடத்துகின்றனா்.














