தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் டாக்டர். ஜி.யு.போப் பொறியியல் கல்லூரிக்கு 2022-2023 ஆண்டுக்கான சிறந்த நாட்டு நல பணித்திட்ட விருது அண்ணா பல்கலைக்கழகம் சார்பாக வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழகம் டீன் பேராசிரியர் டாக்டர்.செண்பக விநாயகமூர்த்தி கல்லூரி முதல்வர் டாக்டர்.ஜாஃபிந்த்திடம் விருதை வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கு நாட்டு நலப்பணி அலுவலர் டென்னிசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.









