ஒன்றியபோலிஸ் எனக்கூறி 3800 டாலரை பறித்த ஈரானிய கொள்ளையர்கள் 6 பேர் கைது 3 பெண்களிடம் விசாரணை

0
1062

சோமாலியா நாட்டை சேர்ந்த அலி அகமத் அலி(61)

அந்நாட்டில் தனியார் பள்ளி ஒன்றின் முதல்வராக இருந்து வருகிறார்.

கண் சிகிச்சைக்காக நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக சென்னை வந்த அவர் ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்தார்.

இந்த நிலையில் சிகிச்சைக்காக வழிகாட்டியான அப்துல் என்பவருடன் அலி நுங்கம்பாக்கம் மருத்துவமனைக்கு சென்றுவிட்டு மாடல் பள்ளி சாலை கார்ப்பரேஷன் பள்ளி எதிரே நடந்து வந்த போது அவ்வழியாக இரண்டு காரில் வந்த மூவர் வழிமறித்து, தங்களை மத்திய காவல்துறையினர் எனக்கூறி, சோதனை செய்ய பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை கேட்டுள்ளனர்.

இதனையடுத்து அலி தனது கைப்பையில் இருந்து ஆவணங்களோடு பர்சையும் எடுத்துள்ளார், கண் இமைக்கும் நேரத்தில் மர்ம நபர்கள் அவரது பர்சில் வைத்திருந்த அமெரிக்க டாலர் 3800ஐ (இந்திய மதிப்பில் ரூ.2,77,000) பறித்து தப்பினர்.

இது தொடர்பாக அலி ஆயிரம் விளக்கு காவல்துறையினரிடம் புகார் அளித்த போது அவர்கள் போலி போலீஸ் என தெரியவந்தது. அங்குள்ள சிசிடிவியில் பதிவான முக அடையாளம் வட மாநிலத்தவர் போல் இருந்தது. இதே பாணியில் கொள்ளையடிக்கும் பழைய குற்றவாளியின் அடையாளங்களை தேடினர்.

மேலும் சிசிடிவியில் பதிவான அடையாளங்களில் உள்ள நபர்கள் குறித்து அனைத்து லாட்ஜ் மற்றும் விடுதி உரிமையாளர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் சிசிடிவிகாட்சிகளை பிந்தொடர்ந்த போலிசார் இந்த கும்பல் கோவளத்தில் உள்ள ரிசார்டில் தங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.தகவலின் பேரில் நுங்கம்பாக்கம் தனிப்படை போலீசார் விரைந்து அறையில் பதுங்கி இருந்த 3 பெண்கள் உட்பட 9 பேரை கைது செய்தனர்.

இவர்களிடம் நடத்திய விசாரணையில் கவனத்தை திசை திருப்பி கொள்ளையடிக்கும் ஈரானிய கும்பல் என தெரியவந்தது. ஈரானிய நாட்டை சேர்ந்த சபீர் (35), ரூஸ்தம்சைதி( 28), ஷியவஸ் (26) மற்றும் 3 பெண்கள் உட்பட 9 பேர் என தெரியவந்தது.

கவனத்தை திசை திருப்பி நொடிப்பொழுதில் லாவகமாக திருடுவதில் ஈராணிய கொள்ளையர்கள் வல்லவர்கள். இவர்கள் துணி வியாபாரம் செய்வது போல் ஆளில்லாத பகுதியை நோட்டமிட்டு முதியவர்களை குறிவைத்து திருடுவது, போலீஸ் என கூறி
நகைகளை மடித்து வைக்க சொல்லி கற்களை மடித்துகொடுத்து கொள்ளையடிப்பது போன்ற பாணியில் கொள்ளையில் ஈடுபடுகின்றனர்.

இதே போல் சென்னையில் பல இடங்களில் கைவரிசை காட்டியது தெரியவந்தது. இவர்களிடமிருந்தி 13 செல்போன் , ஈரான் பணம் 5லட்சம், அமெரிக்கா டாலர் 28, இந்திய பணம் 57 ஆயிரம் ரூபாய் மற்றும் 2 கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here