கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக ஆங்காங்கே முகாம்களில் மக்களின் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது இந்தச் சூழலில் புனேவில் இருந்து பெங்களூரு வழியாக 5 லட்சம் கோவீஷீல்டு தடுப்பூசி மருந்து சென்னை விமான நிலையம் வந்தது.
தமிழகத்தில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இங்கு தடுப்பூசிகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உடனடியாக தமிழகத்திற்கு கூடுதலாக தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என தமிழக அரசு ஒன்றிய அரசிடம் வலியுறுத்தி உள்ளது.
தமிழக மக்கள் அனைவருக்கும் விரைவில் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்பதற்காக தமிழக அரசு நேரடியாக தடுப்பூசிகளை கொள்முதல் செய்தும் வருகிறது.
இந்நிலையில் தமிழ்நாடு அரசுக்கு புனேவில் இருந்து பெங்களூரு வழியாக இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான மூலம் 42 பார்சல்களில் 5 லட்சம் டோஸ் கோவீஷீல்டு தடுப்பூசி மருந்துகள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தது.
இந்த தடுப்பூசி மருந்துகளை சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள மாநில தடுப்பூசி சேமிப்பு மையத்திற்கு கொண்டு சென்றனர்.
பின்னர் பற்றாக்குறை உள்ள மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்படும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.