தூத்துக்குடி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் சி.சைரஸ். இவரை தென் மண்டலத்துக்கு பணியிட மாற்றம் செய்து டி.ஜி.பி உத்தரவிட்டுள்ளார். இதே போன்று தூத்துக்குடி மாவட்ட தனிப்பிரிவு இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் பேச்சிமுத்து. இவரை விருப்பத்தின் பேரில் கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியிட மாற்றம் செய்து நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.








