மதுரையில் மழை காரணமாக பாதிக்கப்பட்ட நெல் பயிர்களுடன் விவசாயிகள் போராட்டம்:
மதுரை மாவட்டம் சமீப காலமாக பெய்த மழை காரணமாக சமயநல்லூர், தேனூர், தோடனேரி, ஊர்மெச்சிக்குளம், கட்டப்புளி நகர் ஆகிய பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த 200 ஏக்கர் நெல் பயிர் தொடர் மழையால் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, பாதிக்கப்பட்ட விவசாயிகள் 20- க்கும் மேற்பட்ட விவசாயிகள் அழுகிய நெல் பயிர்களுடன், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக போராட்டம் நடத்தினார்கள். மேலும், பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை வேளாண்மைத்
துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் கோரிக்கை விடுத்தனர்.















