தமிழகத்தில் நாளுக்கு நாள் பெட்ரோல் டீசல் விலை ஏறி வருகிறது . விலை உயர்வால் வாகன ஓட்டிகள பாதிக்கப்பட்டுள்ளனர் .. தொடர்ந்து அத்திவசிய பொருட்கள் மற்றும் கட்டுமான பொருட்களின் விலை உயர்வாலும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்
தற்போது தமிழகத்தில் அதிக படியாக ஸ்பீட் பெட்ரோல் விலைரூபாய்105.84 பைசாவுக்கும் டீசல் விலைரூபாய் 96.18 பைசாவுக்கு கொடைக்கானலில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது .. இதனால் வாகன ஓட்டிகள் பெட்ரோல் விலை உயர்வால் தங்களின் அன்றாட தேவைகளுக்கும் சென்று வர முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர் ..

மத்திய அரசு நாளுக்கு நாள் பெட்ரோல் விலை உயர்த்தி வருவது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது ..பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டுமென கோரிக்கையும் எழுந்துள்ளது .














