கோவை கிணத்துக்கடவு அருகே நான்குவழிச்சாலையில் ரோட்டை கடந்த 20 ஆம் தேதி ஒரு மொபட்மீது பார்சுனர் சொகுசுகார் மோதியது இதில் ஒருவர் பலியானார்.இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார்,
பொள்ளாச்சி அருகே உள்ள அர்த்தநாரி பாளையத்தைச் சேர்ந்தசொகுசுகார் டிரைவர் சுரேஷ் (33) என்பவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைதுசெய்தனர்.இந்த சொகுசுகார் ஒரு நூல்மில் அதிபருக்கு சொந்தமானது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட கார்டிரைவர் சுரேசை போலீஸ்நிலையத்தில் இருந்து ஜாமினில் விட கிணத்துக்கடவு இன்ஸ்பெக்டர் சுரேஷ் ,ஏட்டு வெங்கடாச்சலம் ஆகியோர் 20ஆயிரம் லஞ்சமாக தரவேண்டும் என தனியார் நூல்மில் மேலாளரான பொள்ளாச்சி தென்சங்கம்பாளையத்தைசேர்ந்த ரமேஷ்குமார் என்பவரிடம் கேட்டுள்ளனர்.அதற்கு தன்னிடம் 12 ஆயிரம் இருப்பதாக கூறி ஏட்டு வெங்கடாச்சலத்திடம்கொடுத்துள்ளார். வெங்கடாச்சலம் அந்தபணத்தை இன்ஸ்பெக்டர் சுரேஷிடம் கொடுத்துள்ளார்.

பின்னர் இதுகுறித்து
ரமேஷ்குமார் நூல்மில் உரிமையாளரிடம் கூறினார்.அவர் போலீஸ் உயர் அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் கிணத்துக்கடவு இன்ஸ்பெக்டர் சுரேஷ், ஏட்டு வெங்கடாசலம் இருவரையும் உடனடியாக மைக்கில் தொடர்புகொண்டு இருவரையும் உடனடியாக கோவை ஆயுதப்படை செல்ல உத்தரவிட்டார்.

தொடர்ந்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தி ய கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் ஏட்டு வெங்கடாசலம் ஆகியோர் லஞ்சம் வாங்கியது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவரையும் நேற்று இரவு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இன்ஸ்பெக்டர் சுரேஷ் சேலம் மாவட்டத்திற்கு மாறுதலாகி இன்னும் சில நாட்களில் செல்ல உள்ள நிலையில் சஸ்பெண்ட் ஆகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல துடியலூர் போலீஸ் ஸ்டேஷன் எல்லையில் உள்ள ஆயுர்வேத அழகு நிலைய உரிமையாளர் போலீஸ் எஸ்பி செல்வன் நாகரத்தினதிடம் புகார்
அளித்தார்.
அந்த புகாரில் துடியலூர் போலீஸ் ஸ்டேஷனில் தலைமை காவலராக உள்ள கிஷோர் மற்றும் முதல் நிலை காவலர் ஜோதிமணி ஆகிய இருவரும் ஆயுர்வேத சென்டரில் தவறான சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதாக வழக்குப்பதிவு செய்து விடுவோம் என்றும் அவ்வாறு வழக்கு பதிவு செய்யாமல் இருக்க வாரம் 25 ஆயிரம் ரூபாய் வேண்டும் என்று மிரட்டி பணம் பெற்றுள்ளனர்.
கொரோனா ஊரடங்கு காரணமாக ஆயுர்வேத நிலையம் மூடப்பட்டு உள்ள நிலையிலும் இரு போலீஸ்காரர்களும் தொடர்ந்து லஞ்சம் கேட்டு அந்த ஆயுர்வேத நிலைய உரிமையாளரை தொல்லை செய்து வந்துள்ளனர். இதையடுத்து அவர் புகார் அளித்துள்ளார் .புகாரின் பேரில் விசாரணை நடத்திய எஸ்பி செல்வ நாகரத்தினம், இவர்கள் இருவரும் லஞ்சமாக பணம் பெற்றது உண்மை என தெரிய வந்தது.
இதையடுத்து இருவரையும் சஸ்பெண்ட் செய்து துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார் கோவையில் ஒரே நாளில் லஞ்சப் புகாரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் உட்பட 4 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருப்பது போலீசார் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.