திருநெல்வேலி மாவட்டம், நடுக்கல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் சுற்று வட்டாரத்தில் உள்ள நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளி வளாகம் மிகவும் பள்ளமான பகுதியாக அமைந்துள்ளதால் இரு நாட்களாக பெய்த மழையில் நீர் தேங்கி குளம் போல் மாறிவிட்டது.
ஒரு பிளாக்கில் இருந்து மறு பிளாக்குக்கு செல்லவே மாணவர்கள் மிகவும் கஷ்டப்பட்டனர். வழக்கமாகவே வளாகத்தில் தேங்கும் தண்ணீர் வடிய மிக வெகு நாட்களாகும். அதுவரை மாணவர்களும் ஆசிரியரும் கஷ்டப்பட நேரிடுகிறது.
எனவே கல்வித் துறை அதிகாரிகள் வளாகத்தை நிரல் படுத்த தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
காணொளி கீழே உள்ளது.









