வா வாரம் ஒரு ஆடியோ மூலம் தனது அரசியல் வருகைக்கு கட்டியம் கூறி வரும் சசிகலா தற்போது புதிய ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அந்த ஆடியோவில் அவர் சிவகங்கை அதிமுக பிரமுகர் பூவந்தி சரவணனுடன் பேசுகிறார்.
இனியும் நான் பொறுத்துக் கொள்ள மாட்டேன் கட்டாயம் வருவேன் இப்போதைய பொறுப்பாளர்கள் கட்சியின் நலனை பார்ப்பதில்லை தலைவர் காலத்து பொறுப்பாளர்களை கூட மதிப்பதில்லை பணம் மூலம் தொண்டர்களை விலை பேச முடியாது எந்த எதிர்ப்பு வந்தாலும் உங்களுடன் நிற்பேன் என்று பேசியுள்ளார்.















