ஆளுநர் உரையுடன் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது.
திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் முதல்முறையாக ஆளுநர் உரையாற்றவுள்ளதால் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்ப்பார்க்கப்பட்ட து
அதற்கேற்ப சட்டமன்றத்தில் ஆளுநர் உரை தொடங்கியது
நீட் தேர்வை ரத்து செய்ய சட்டமுன்வடிவு இயற்றப்படும், கொரோனா பெருந்தொற்று தீவிரம் குறைந்தவுடன் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடத்தப்படும். தமிழ்நாட்டின் நிதி நிலை தொடர்பாக ஜுலை மாதம் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று ஆளுநர் உரையில் குறிப்பிட்டார
‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தின் மூலம் இதுவரை 63 ஆயிரத்து 500 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டதாக தெரிவித்தார்.













