கயத்தாறு தேசிய நெடுஞ்சாலை அருகே கரிசல்குளம் பகுதியில் தனியார் நிலத்தில் மூதாட்டியின் சடலத்தை கடந்த 5-ம் தேதி போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் இந்த மூதாட்டியின் பெயர் காந்திமதி (71) என தெரிய வந்தது. இந்த நிலையில் இந்த மூதாட்டி கொடுக்கல் வாங்கல் தகராறில் கொலை செய்யப்பட்ட நிலையில் சண்முக பாண்டியன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.








