ஆடிக்கு தாய்வீடு போன மனைவி – ஏக்கத்தில் கணவர் தூக்கிட்டு தற்கொலை

0
783

திருப்பத்தூர் மாவட்டத்தின் தாமலேரிமுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் குபேந்திரன் மகன் திலீபன் (33).

இவர், திருப்பத்தூர் தாலுகா அலுவலகத்தில் சர்வேயராக பணிபுரிந்து வந்தார்.

திலீபனும், அதே பகுதியை சேர்ந்த மருத்துவரான 27 வயது திவ்யாவும் கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர்.

இந்த நிலையில் ஆடி மாத பிறப்பையொட்டி கடந்த வெள்ளிக்கிழமை திவ்யாவை அவரது பெற்றோர் தங்களது வீட்டுக்கு அழைத்து சென்றனர்.

தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை திலீபனின் குடும்பத்தினர் மருமகளை அழைத்து வருவதற்காக திவ்யாவின் பெற்றோர் வீட்டுக்கு சென்றனர்.

ஆனால் புதுப்பெண்ணை அவர்கள் அனுப்பாத நிலையில் இரு குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் மாப்பிள்ளை வீட்டார் திரும்பி விட்டதாக கூறப்படுகிறது.

இதில், மன உளைச்சலில் இருந்த திலீபன் நேற்று மாலை தனது வீட்டின் மேல் மாடியிலுள்ள அறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதை கண்ட அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்து கதறி அழுதனர்.

இச்சம்பவம் குறித்து போலீசார் , வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here