தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு அமல் ஆக இருந்தாலும் 27 மாவட்டங்களில் ஓரளவு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது டாஸ்மாக் கடைகள் கூட திறக்கப்பட்டுள்ளன. ஆனாலும் பொது போக்குவரத்து இயங்காததால் மக்கள் அன்றாட பணிகள் மற்றும் தொழில் முயற்சிகள் வேலை வாய்ப்புகள் மிகவும் பாதிக்கப்படுகின்றன.
எனவே கொரோனா பாதிப்பு குறைந்த27 மாவட்டங்களில் 50{7a0882499a9dac11d1a5e618ecfeec8f2b279bdf1fc3589101913219fc8b42ec} பஸ்களை இயக்க என்பது பற்றி அரசு ஆலோசித்து வருகிறது. இது குறித்து இன்று மாலை மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் முக ஸ்டாலின் கலந்தாலோசித்தார். அதன் முடிவில் 50{7a0882499a9dac11d1a5e618ecfeec8f2b279bdf1fc3589101913219fc8b42ec} பஸ்களை இயக்க முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது. மாவட்டம் விட்டு மாவட்டம் இயக்கவும் நீண்ட தூரங்கள் இயக்கவும் சில ஒழுங்கு முறைகளை கடைபிடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.











