திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வெங்கிளி சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பெங்களூரை சேர்ந்த பாதிரியார்கள் விக்டர் மோகன் மற்றும் தாவீது ஓட்டுனர் சாம்சன் உடன் சென்னை சென்று பெங்களூரு திரும்பி கொண்டிருந்தனர்.

அப் போது கார் ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவர் மீது மோதி சாலையோரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்ததில் பாதிரியார்கள் விக்டர் மோகன் மற்றும் தாவீது ஆகியோர் உயிரிழந்தனர். சாம்சன் படுகாயங்களுடன் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.












