மணக்கோலத்தில் கொரோனா நிவாரண உதவி தம்பதி அசத்தல்

0
985

கொரானா இரண்டாம் அலை முழு ஊரடங்கு காரணமாக திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகள் குறைவான நபர்களுடன் நடத்த அறிவுறுத்தயட்டுள்ளது.

அவ்வாறே மதுரை தெப்பக்குளம் பகுதியை சேர்ந்த நாகராஜன் தமிழ் மற்றும் பாண்டி மீனா இருவரும் தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்ட நிலையில், அந்தப்பகுதியில் சாட்டையடித்து நாடோடிகளாய் வாழும் 20 குடும்பங்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான அரிசி, மளிகைப்பொருட்கள், பழங்கள், உணவு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

மாலையும் கழுத்துமாக திருமணம் முடித்த கையோடு மணக்கோலத்தில்

நிவாரணப்பொருள் வழங்க வந்த மணமக்களை ஆரத்தி எடுத்து மேளத்துடன் நடனமாடி அம்மக்கள் வரவேற்றனர்.

விஜய் ரசிகரான நாகராஜன் தமிழ், தனது திருமணத்தை முன்னிட்டு தனது துணைவியார் மற்றும் விஜய் ரசிகர் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் வந்திருந்து தனது பெற்றோர் மற்றும் பெண் வீட்டார் ஆதரவோடு இந்த நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here