திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்செங்கம் காவல் எல்லைக்குட்பட்ட திருவண்ணாமலை கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையில் உள்ள ஆனந்தவாடி கிராமப்பகுதியில் உள்ள சோதனை சாவடியில் மேல்செங்கம் காவல் ஆய்வாளர் செங்குட்டுவன் தலைமையிலான காவலர்கள் உள்ளடங்கிய குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டபோது கல்லக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த செங்கணான் கொள்ளை பகுதியை சேர்ந்த ஏழுமலை மகன் அஜித் வயது 20 என்பவர் கர்நாடகா மாநிலத்திலிருந்து 816 மது பெட்டகங்களை தனக்கு சொந்தமான டாட்டா ஏசி சரக்கு வாகனத்தில் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது

தொடர்ந்து மது பெட்டகங்களையும் பெட்டகங்களை கடத்தி வந்த வாகனத்தையும் பறிமுதல் செயதனர் .












