மத்திய அரசு தொகுப்பிலிருந்து மிக குறைவான எண்ணிக்கையிலேயே தடுப்பூசி தரப்படுவதாக முகஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவரது அறிக்கை:
தமிழ்நாட்டின் தடுப்பூசி தேவை 1 கோடியாக இருக்கும் நிலையில், 42 லட்சம் மட்டுமே தரப்பட்டுள்ளது, மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டுக்கு குறைவாகவே தடுப்பூசி வழங்கப்படுகிறது. ஜூனிலாவது முன்னுரிமை அளிக்கவேண்டும்.
அதுமட்டுமின்றி, செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவரவும் அனுமதி அளிக்கவேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.















