தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் புதுக்கோட்டையில் இன்று காலை மாரத்தான் ஓட்டத்தை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
மாணவ-மாணவிகள், சமூக ஆர்வலர்கள், காவல்துறையினர், விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் உட்பட பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த ஓட்டத்தில் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.
பழைய பேருந்து அருகில் தொடங்கிய மாரத்தான் ஓட்டம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நிறைவு பெற்றது. இந்த விழிப்புணர்வு மாரத்தான் ஆசிய சாதனைப் பட்டியலில் இடம் பிடித்துள்ளது.















