உசிலம்பட்டி ஆர்.கே. கருப்பதேவர் தெருவில் வசித்து வந்தவர் சரவணன் (35). நகை பட்டறை வைத்திருந்தார். இவருக்கு கடன் தொல்லை அதிகமானதால் குடும்பத்துடன் தற்கொலை செய்ய முடிவெடுத்தார்.
அவரது மனைவி ஸ்ரீநிதி பூங்கோதை (30), குழந்தைகள் மகாலட்சுமி (10), அபிராமி (5), அமுதன்(5) ஆகியோருக்கு விஷம் கொடுத்துவிட்டு தானும் விஷம் அருந்தினார். இதில் அனைவரும் இறந்தனர்.
இந்த பரிதாபகரமான சம்பவம் குறித்து உசிலம்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.














