கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு வழிநடத்திய பேராசிரியை நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர் கைதாகினர். இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. ஜாமீனில் வெளிவந்த நிர்மலா தேவி இன்று நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
மனநலம் பாதிக்கப்பட்டதால் மருத்துவமனைக்கு சென்றுள்ளார் என அவரது வக்கில் கூறியதை நீதிபதி ஏற்கவில்லை. இதனால் நிர்மலா தேவி ஜாமீனை ரத்து செய்து பிடி வாரண்ட் பிறப்பித்துள்ளது ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம்.












