அணு மின்நிலையங்கள் மூலம் 9,600 மெகாவாட் மின் உற்பத்தி

0
1231

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையம் சார்பில் சுதந்திர தின விழா நடைபெற்றது.

கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குனர் சஞ்சய் குமார் தலைமையில் இந்திய அணுமின் கழக இயக்குனர் (தொழில்நுட்பம்) சின்ஹா ராய் தேசிய கொடியை ஏற்றி வைத்து அணு விஜய் நகரியத்தில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

பின்னர் அவர் பேசிய போது இந்தியாவிலேயே அதிநவீன பாதுகாப்பு தொழில் நுட்பத்துடன் கூடியது கூடங்குளம் அணு உலையாகும். தற்போது இந்தியாவில் குஜராத் மாநிலம் காக்ரபாரில் 2 அணு உலைகளும்,

ராஜஸ்தான் மாநிலம் ராவத் பாட்டாவில் 2 அணு உலைகளும், அரியானா மாநிலம் கோரக்பூரில் 2 அணுஉலைகளும் ஆக மொத்தம் 6 புதிய அணு உலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் 2 அணு உலைகளின் கட்டுமான பணிகள் முடியும் நிலையில் உள்ளன. இந்த அணு உலைகள் தலா 700 மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்டவை ஆகும்.

இந்த அணு உலைகள் முழுக்க, முழுக்க இந்திய தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டு வருகிறது. கூடங்குளத்தில் ரஷிய நாட்டு தொழில்நுட்பத்துடன் மேலும் 2 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 புதிய அணு உலைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

தற்போது நாட்டில் அணு உலைகள் மூலம் 6,780 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. வருகிற 2026-27-ம் ஆண்டுக்குள் அணு மின்நிலையங்கள் மூலம் 9,600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் விஞ்ஞானி இவானி சவ், நிலைய இயக்குனர் சுரேஷ் பாபு, திட்ட இயக்குனர் ஜெயகிருஷ்ணன், தலைமை கண்காணிப்பாளர் பி.ஏ.சுரேஷ், மற்றும் இந்திய, ரஷிய விஞ்ஞானிகள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here