சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்படி பழனிச்சாமி “பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் பெரும்பாலானவை நஷ்டத்தில் தான் இயங்குவதால் 4.60 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயன் பெறும் வகையில் கொள்முதல் விலையை உயர்த்தியுள்ளோம்”
போக்குவரத்து கட்டணம், டீசல் விலை உயர்ந்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு தான் பால் விலையை உயர்த்தியுள்ளோம் “பால் விலை உயர்த்தப்பட்டு ஐந்து ஆண்டுகள் ஆகின்றன. இந்த ஐந்து வருடங்களில் விலைவாசி எவ்வளவு உயர்ந்துள்ளது என்பது அனைவருக்குமே தெரியும்.
அனைவருடைய சம்பள விகிதமும் உயர்ந்துள்ளது. அனைவருக்கும் உயர்வு இருக்கும் போது பால் உற்பத்தியாளர்களுக்கு உயர்த்தி தானே கொடுக்க வேண்டும். மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் பால் விலை குறைவாகவே உள்ளது” என்றும் கேள்வி எழுப்பினார்.















