சென்னையில் தலைமை செயலகத்தில் மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நாளை மறுநாளுடன் முடிவடையும் நிலையில், அதை மேலும் ஒரு வாரம் நீட்டிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
ஏனெனில், தமிழகத்தில் மே மாத இறுதி அல்லது ஜூன் மாத தொடக்கத்தில் கரோனா நோய்த் தொற்று உச்சத்தை அடையும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
இதன்பிறகு, பேரவை கட்சிகளைச் சோ்ந்த 13 பிரதிநிதிகள் அடங்கிய குழுவுடன் ஆலோசனை நடத்தினார். பிறகு பொதுமுடக்கம் குறித்து அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்
இப்போதுள்ள விதிமுறைப்படி மே 31 வரை நீடிக்க உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தெரிகிறது.














