தமிழக காவல்துறையில் தகவல் தொடர்பு சாதனங்கள் வாங்கிய வகையில் ரூ.350 கோடி வரை ஊழல் நடந்திருப்பதாக திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு டெண்டர் ஒதுக்கியது மூலம் இந்த ஊழல் நடந்துள்ளதாகவும், ஏற்கனவே வாக்கி டாக்கி வாங்கியதில் ரூ.88 கோடி ஊழல் நடைபெற்றதை மூடி மறைத்ததாகவும், அப்படி மூடி மறைத்துவிடாமல் இந்த விவகாரத்தை ஊழல் தடுப்பு துறை விசாரிக்கவேண்டும் என்றும் முக ஸ்டாலின் கூறியுள்ளார்.













