ஐஎன்எக்ஸ் மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் காவலை அக்டோபர் 30ஆம்தேதி வரை நீட்டித்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். இடையில் உடல்நலக்கோளாறு ஏற்பட்டால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டார்.
இந்நிலையில் இன்று சிதம்பரத்துக்கு வயிற்று வலி ஏற்பட்டது. அவரை டெல்லி ஆர்.எம்.சி மருத்துவமனையில் திகார் சிறை நிர்வாகம் அனுமதித்துள்ளது. அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.















