“கடலில் பாதி கடம்பா” என்றால் என்ன தெரியுமா..?
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி அருகே உள்ள கடம்பா குளம் என அழைக்கப்படும் “கடலில் பாதி கடம்பா” என அனைவராலும் அழைக்கப்படும் கடம்பா குளம் ஆனது சுமார் 160 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஒரு மிகப்பெரிய ஒரு குளம் ஆகும்.சுமார் 300 ஏக்கருக்கும் மேல் பரந்து விரிந்து காணப்படுவதால் இதனை கடலில் பாதி என அழைக்கப்படுவதும் வழக்கம். இத்தகைய பாரம்பரியமிக்க குளத்தை பாதுகாக்க வேண்டியது நமது அனைவரின் கடமை ஆகும்.







