பாகிஸ்தானில் நில நடுக்கம்: 5 பேர் பலி

0
370

பாகிஸ்தானிலும், ஆஸாத் காஷ்மீர் பகுதியிலும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் சாலைகள் பிளந்து துண்டிக்கப்பட்டது. கட்டடங்கள் சேதம் அடைந்தன. பாகிஸ்தானில் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக இது பதிவாகி உள்ளது.

சியால்கோட், சர்கோதா, மன்சேரா, குஜராத், சித்ரால், மலாக்கண்ட், முல்தான், ஷாங்க்லா, பஜபூர், ஸ்வாட், சாஹிவால், ரஹீம் யர் கான் , மிர்பூர் ஆகிய பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆஸாத் காஷ்மீர் பகுதியில் மீர்பூர் மாவட்டத்தில் சாலைகள் பலத்த சேதம் அடைந்தன.

இந்த நிலநடுக்கத்தால் 5 பேர் வரை உயிர் இழந்து இருக்கலாம் என கூறப்படுகிறது . நூற்றுக்கும் அதிகமானபேர் காயம் அடைந்து உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here