தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட எஸ்பி அலுவலகம் உள்ளிட்ட முக்கியமான அரசு அலுவலகங்கள் எந்தவித அலுவலகத்திலும் முன்பாக ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டம் நடத்துவதற்கு தடை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் அனுமதிக்கப்பட்ட அலுவலகங்களில் 7 நாட்களுக்கு முன்பாக அனுமதி கடிதம் வழங்க வேண்டும் என அவர் அந்த செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.








