பூச்சிகளில் பெரும்பாலானவை நன்மை செய்யும் பூச்சிகளே. ஒரு சதவீதம் பூச்சிகள் மட்டுமே தீமை தருபவையாக உள்ளன.
மனிதன் 300 வகையான வண்டுகளையும், சுமார் 2 ஆயிரம் வகை பூச்சிகளையும் உணவுக்காக பயன்படுத்துகிறான். பூச்சிகளும், வண்டுகளும் ஒரு மனிதனுக்கு 20 கோடி என்ற எண்ணிக்கையில் வாழ்கின்றன.
இயற்கை சுழற்சியின் பெரும்பணியை இந்த பூச்சி இனங்களே செய்கின்றன. ஆம், இவையே உயிரற்ற தாவரங்களையும், விலங்குகளையும் உண்டு மறுசுழற்சி செய்கின்றன. இதனால்தான் மண் வளம்பெறுகிறது.
மனிதன் உள்பட எல்லா உயிரினங்களுக்கான உணவுத் தேவையை ஈடு செய்ய பூச்சிகளின் இந்த செயல்களே காரணமாக இருக்கிறது. பூச்சிகளின் உதவியால் 30 சதவீத உணவு கிடைக்கிறது என்பது ஒரு மதிப்பீடு.














