90களின் தொடக்கத்தில் தென் மாவட்டங்களில் நடைபெற்ற சமூக அமைப்பின் பின்பு தேவர் குல கூட்டமைப்பு என்ற அமைப்பை நிறுவியவர் சண்முகையாபாண்டியன்.
அவர் இன்று காலை மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் மாரடைப்பால் இயற்கை எய்தினார்.அவரது வயது 71.
சண்முகையா பாண்டியன் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உள்ள குறிப்பன்குளம். தன் தாயார் ஊரான மணியாச்சியில் வசித்து வந்தார். பின்பு தனது மனைவியின் ஊரான கணக்குப்பிள்ளை வலசையில் வாழ்ந்தார்.









