கண்மாய் நீரில் மூழ்கி வாத்து மேய்த்தவர் பலி

0
304

:

மதுரை திருப்பரங்குன்றம், லிங்கவாடி அய்யானார்
புரத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி மகன் பெரிய
கருப்பன்(36). வாத்து மேய்த்து வியாபாரியான இவர், கூத்தியார்
குண்டு கண்மாயில் வாத்துகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்பொழுது, வாத்துகள் அதிக ஆழம் உள்ள பகுதிக்குச் சென்றன. அவற்றை கரைக்கு கொண்டு வருவதற்காக அவர் தண்ணீரில் இறங்கினார். ஆழம் அதிகமாக இருந்ததால், திடீரென தண்ணீரில் மூழ்கினார்.

அக்கம் பக்கத்தினர் மதுரை திருப்பரங்
குன்றம் தீயணைப்பு நிலையத்
திற்கு தகவல் கொடுத்தனர். நிறைய அலுவலர் உதயகுமார் தலைமை
யிலான தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் அவரை
மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். எனினும், அவர் உயிரிழந்தார் . சம்பவம் குறித்து, மதுரை ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்
பதிவு செய்து, உடலை உடற்கு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இவருக்கு, திருமணம் ஆகி பாண்டீஸ்வரி எனும் மனைவியும் இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர்.
.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here