தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் ஆலன் திலக் கராத்தே பள்ளியை சேர்ந்த மாணவர்கள் சதீஷ் மற்றும் ஆலன் ஆகிய இருவரும் நேபால் நாட்டில் நடைபெற்ற சர்வதேச அளவிலான கராத்தே போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றனர். இந்த நிலையில் வெற்றி பெற்ற மாணவர்கள் இன்று முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இதில் பயிற்சியாளர் டென்னிஷன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.








