தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு பகுதியை சேர்ந்த தினேஷ்குமார் (24) என்பவர் கடந்த 25ஆம் தேதி அப்பகுதியில் நின்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த அனிபா மற்றும் சதீஷ் ஆகியோர் தினேஷின் செல்போனை பறித்துச் சென்றனர். இது குறித்து விசாரணை நடத்தி வந்த போலீசார் செல்போன் பறிப்பில் ஈடுபட்டவர்களை இன்று கைது செய்தனர்.








