:
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்
சங்கம் சார்பாக, மாவட்டம் முழுவதும் அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில், ஆர்ப்பாட்டம் நடத்துவது என்ற முடிவின்படி திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்பாட்டத்துக்கு மாவட்டத் தலைமை நிலைய செயலாளர் லோகநாதன் தலைமை தாங்கினார். வட்டாரத் தலைவர் சுரேஷ்பாபு முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்களை டிஜிட்டல் கிராப் சர்வே பணியினை செய்ய சொல்லி நிர்பந்திப்பதை விட்டு விட்டு புதிதாக ஆட்கள் நியமித்து பணி செய்ய வேண்டி யது தொடர்பாக, செயலாளர் செந்தில்குமார் பேசினார்.
திண்டுக்கல் மேற்கு
மாவட்டம் முழுவதிலும் உள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் திரளாக கலந்து கொண்டு கோரிக்கை முழக்கம் செய்தனர்.













