தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே ஆத்தூர் பகுதியை சேர்ந்த பரமசிவம் (58) என்பவர் தனியார் திருமண மண்டபத்தில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்தார். அப்போது அவர் சாலையை கடந்த போது வேகமாக வந்த பைக் அவர் மீது மோதியதில் அருகே வந்த காருக்கு அடியில் சிக்கி விபத்தில் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து சிசிடிவி காட்சி அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.









