தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகளை அனைத்தையும் ஊர்வலமாக கொண்டு சென்று கடலில் கரைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்காக நூற்றுக்கணக்கான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.








