அஸ்ரா கர்க் _ நெல்லை, மதுரை என பல இடங்களில் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி, நேர்மையான செயல்பாட்டால் பேர் வாங்கியவர். இவர் தற்போது சிபிஐ டிஐஜியாக உள்ளார்.
இவரது குணம் அறியாமல், பிரபலமான சோமா கட்டுமான நிறுவனம், நிலுவையில் கிடந்த வழக்கைமுடிக்க 2 கோடி ரூபாய் பேரம் பேசியது. உள்துறை அமைச்சக அதிகாரி தீரஜ்குமார் சிங் உதவியுடன் பணம் கொடுக்க வந்த தரகரை லோதி ரோட்டில் சிபிஐயினர் மடக்கிப்பிடித்தனர்.
இந்த லஞ்ச தொகையை அளிக்க அறிவுறுத்திய சோமா கட்டுமான நிறுவன துணைத்தலைவர் ராமச்சந்திர ராவும் கைது செய்யப்பட்டார்.















