தூத்துக்குடி கணேசன் காலனியை சேர்ந்த ஆண்டவ பெருமாள் (50) என்பவர் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் இவர் மோட்டார் சைக்கிளில் அப்பகுதியில் சென்று கொண்டிருந்த போது மாநகராட்சியின் குப்பை வாகனம் அவர் மீது மோதியது. இதில் சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.







