தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி காணியாளர் தெரு பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக ஆறுமுகநேரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பெயரில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தியதில் அதே பகுதியை சேர்ந்த பாலமுருகன் (22), மணிகண்டன் (31), பெரியநாயகம் (42) ஆகிய மூவரை கைது செய்து 4.600 கிலோ கஞ்சா மற்றும் இரு பைக்குகளை பறிமுதல் செய்தனர்.









